செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா

Published On 2021-10-22 11:25 GMT   |   Update On 2021-10-22 11:25 GMT
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 49,710 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48,376 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,129 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று வேலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 8 பேர் குணமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பரவி வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஊரடங்கு தளர்வு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிய வேண்டாம். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News