ஆட்டோமொபைல்
மஹிந்திரா

என்ஜின் கோளாறு காரணமாக கார்களை ரீகால் செய்யும் மஹிந்திரா

Published On 2021-07-20 07:19 GMT   |   Update On 2021-07-20 07:19 GMT
மஹிந்திரா நிறுவனம் கோளாறு ஏற்பட்டதால் டீசல் கார் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த 600 டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது. பாதிக்கப்பட்ட கார்களின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ரீகால் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மாடல்கள் ஜூன் 21 முதல் ஜூலை 2 ஆம் தேதி வரை நாசிக் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.



இந்த பாதிப்பு எந்தெந்த மாடல்களில் ஏற்பட்டுள்ளது என மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை மஹிந்திரா தொடர்பு கொண்டு காரை இலவசமாக சரி செய்து கொடுக்கும். மஹிந்திராவின் நாசிக் ஆலையில் தார், ஸ்கார்பியோ, மராசோ மற்றும் XUV300 போன்ற மாடல்களை உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த வாரம் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ நியோ மாடலை அறிமுகம் செய்தது. மேலும் XUV700 எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வருகிறது.
Tags:    

Similar News