செய்திகள்
மரணம்

கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளி மாணவன் திடீர் மரணம்

Published On 2021-09-11 11:23 GMT   |   Update On 2021-09-11 11:23 GMT
கோபிசெட்டிபாளையம் அருகே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:

கோபி அருகே உள்ள புது கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரிவாசன் (வயது 8). இவன் இண்டியம் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். இந்த நிலையில் ஹரிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தான். மேலும் வாந்தி எடுத்து கொண்டு இருந்தான்.

இதையடுத்து ஹரி வாசனை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News