செய்திகள்
வெறிநாய்கள் கடித்ததில் பலியான ஆடுகள்.

சாத்தான்குளம் அருகே வெறிநாய்கள் கடித்து 15 ஆடுகள் பலி

Published On 2019-12-04 09:50 GMT   |   Update On 2019-12-04 09:50 GMT
சாத்தான்குளம் அருகே வெறிநாய்கள் கொட்டகைக்குள் புகுந்து 15 ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பேய்க்குளத்தை சேர்ந்தவர் பால் (வயது 47). இவர் ஏராளமான ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆடுகளை வழக்கம் போல் கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் இன்று காலையில் அங்கு சென்று பார்க்கும் போது 15 ஆடுகள் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வெங்கடேஸ்வரபுரம் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வி.ஏ.ஓ. கருப்பசாமி விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

வெறிநாய்கள் கொட்டகைக்குள் புகுந்து 15 ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News