செய்திகள்
வைகை அணை

வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2019-11-08 10:24 GMT   |   Update On 2019-11-08 10:24 GMT
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் மதுரை உள்பட 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டமும் சீராக உயர்ந்து 64.83 அடியை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழையினால் நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன. எனவே வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.15 அடியாக உள்ளது. 887 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1630 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.10 அடியாக உள்ளது. வருகிற 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.37 அடியாக உள்ளது. 52 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே திறக்கப்படுகிறது.

கூடலூர் 4.2, சண்முகாநதி அணை 5, உத்தமபாளையம் 9.3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News