செய்திகள்
கும்பகோணத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணம் இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயல் தலைவர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். உதவி தலைவர் கீதா, செயற்குழு உறுப்பினர் குமார், நாராயணன், மோகன், வேல்முருகன், ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஊமத்துரை, ராமமூர்த்தி, குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தியன் வங்கி கிளைகள் மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கியில் புதிய எழுத்தர் நியமனங்களை காலதாமதம் செய்வதால் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாகவதை கண்டித்தும், விருப்ப மாறுதல்களுக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு உடனடியாக மாறுதல் வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் இந்தியன் வங்கி கும்பகோணம் மண்டல மேலாளர் ராஜேஸ்வர ரெட்டியிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தனர்.