செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 1 மணிக்கு திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தொட்டு உள்ளது. ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது. ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
இதையடுத்து ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தொட்டு உள்ளது. ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது. ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
இதையடுத்து ஏரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.