செய்திகள்
கீழடி அகழாய்வு

கீழடியில் ‘நீளச்சுவர்’ கண்டுபிடிப்பு

Published On 2019-09-10 03:15 GMT   |   Update On 2019-09-10 03:15 GMT
கீழடியில் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி தொடங்கியது.

இதுவரை முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜக் உட்பட 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி, உறைகிணறு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் போதகுரு நிலத்தில் ஏற்கனவே வட்டவடிவிலான ஒரு செங்கல்வரிசை சுவர் கண்டறியப்பட்டது. மீண்டும் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் போல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுவர் நீண்டு கொண்டே செல்வதால் இதன் தொடர்ச்சி அடுத்துள்ள நிலத்திலும் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News