உள்ளூர் செய்திகள்
மரணம்

பூந்தமல்லி அருகே கண்டெய்னர் லாரிகள்-கார் அடுத்தடுத்து மோதல்: பெண் பலி

Published On 2022-01-24 10:17 GMT   |   Update On 2022-01-24 10:33 GMT
பூந்தமல்லி அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

ஸ்ரீபெரும்புதூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (42) இவரது மனைவி செல்வி (39).

கணவன்-மனைவி இருவரும் பூந்தமல்லியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணவன் மனைவி இருவரும் நேற்று மதியம் 12மணி அளவில் காரில் புறப்பட்டு சென்றனர்.

பூந்தமல்லி அடுத்த பாப்பன்சத்திரம் சந்திப்பு அருகே வந்தபோது காருக்கு முன்னால் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

அப்போது மாடு ஒன்று திடீரென குறுக்கே சென்றது. அதன் மீது மோதாமல் இருக்க கண்டெய்னர் லாரி டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனை எதிர்பார்க்காத லட்சுமணன்- செல்வி ஆகியோர் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இதேபோல் பின்னால் வந்த மேலும் 2 கண்டெய்னர் லாரிகளும் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் லட்சுமணன்- செல்வி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சொண்டு சென்றனர்.

ஆனால் போகும் வழியிலேயே செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News