ஆன்மிகம்
ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை

மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-11-30 08:03 GMT   |   Update On 2020-11-30 08:03 GMT
நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலாவில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலாவில் உள்ள நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை பிரதோஷத்தையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. 

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நெடுஞ்சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்களும் தங்கள் வாகனத்தை நிறுத்தி ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். சிறப்பு பூஜையையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News