செய்திகள்
தோல்வி அடைந்த பெடரர்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் - பெடரரை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தார் அலெக்சாண்ட்ர் சிவ்ரெவ்

Published On 2019-10-11 15:46 GMT   |   Update On 2019-10-11 15:46 GMT
சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் ரோஜர் பெடரரை வீழ்த்திய அலெக்சாண்ட்ர் சிவ்ரெவ் அரையிறுதியில் நுழைந்தார்.
பெய்ஜிங்:

சீனாவில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சிவ்ரெவும் மோதினர்.

இதில் முதல் செட்டை சிவ்ரெவ் 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆக்ரோஷத்துடன் விளையாடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 6-3 என கைப்பற்றி அசத்தினார் சிவ்ரெவ். இந்த வெற்றி மூலம் ரோஜர் பெடரருக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தார் சிவ்ரெவ்.
Tags:    

Similar News