செய்திகள்
வெங்கல் அருகே பெட்ரோல் பங்க் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது
வெங்கல் அருகே பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளையடித்த வழக்கும் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள பூச்சி அத்துப்பேடு கிராமத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது.
இங்கு கடந்த மாதம் 13-ந்தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அரிவாளால் வெட்டி ரூ.1.½ லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக கடந்த 23-ந் தேதி சக்திவேல், சதீஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது தப்பி ஓட முயன்ற போது அவர்கள் இருவரும் படுகாயமடைந்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான சோழவரம் ஒன்றியம், பெருமாள் அடிபாதம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்த வெங்கடேசனை வெங்கல் அருகே கோமக்கம்பெடு என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது தப்பி ஓட முயன்ற அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான வெங்கடேசனை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
வெங்கல் அருகே உள்ள பூச்சி அத்துப்பேடு கிராமத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது.
இங்கு கடந்த மாதம் 13-ந்தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அரிவாளால் வெட்டி ரூ.1.½ லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக கடந்த 23-ந் தேதி சக்திவேல், சதீஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது தப்பி ஓட முயன்ற போது அவர்கள் இருவரும் படுகாயமடைந்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான சோழவரம் ஒன்றியம், பெருமாள் அடிபாதம், அம்பேத்கார் நகரைச் சேர்ந்த வெங்கடேசனை வெங்கல் அருகே கோமக்கம்பெடு என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது தப்பி ஓட முயன்ற அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான வெங்கடேசனை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.