செய்திகள்
அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் நியமனம்- டி.டி.வி.தினகரன்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக செயலாளர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற மத்திய சென்னை மத்திய மாவட்ட செயலாளராக முகமது சித்திக், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக சங்கர் ராஜா, மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக பாரிவள்ளல் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இதுவரை மத்திய சென்னை மத்திய மாவட்ட கழகம், துறைமுகம், கிழக்கு பகுதி செயலாளர் பொறுப்பில் இருக்கும் முகமது சித்திக், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் சங்கர்ராஜா, கொள்ளிடம் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் பாரி வள்ளல் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக செயலாளர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.