செய்திகள்
தற்கொலை

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மகனுக்கு கொரோனா- தாய் தற்கொலை

Published On 2021-06-25 10:07 GMT   |   Update On 2021-06-25 10:07 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனுக்கு திருமணம் நின்று விடுமோ என்ற அச்சத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள கடையனோடை யாதவர் தெருவை சேர்ந்தவர் லிங்கதுரை (வயது 63). இவருக்கு ஜெயலட்சுமி (வயது 52) என்ற மனைவியும் அசோக் என்ற மகனும் உள்ளனர். அசோக்கிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து லிங்கதுரை நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று ஜெயலட்சுமி சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனுக்கு திருமணம் நின்று விடுமோ என்ற அச்சத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News