செய்திகள்
திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருட்டு

Published On 2020-11-09 06:24 GMT   |   Update On 2020-11-09 06:24 GMT
கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூர்:

கோவையை அடுத்த துடியலூர் அருகே சுப்பிரமணிபாளையத்தில் உள்ள சாய் ஸ்ரீநகரை சேர்ந்தவர் முருகன்(வயது 67). இவருடைய மனைவி சந்தியா(60). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மேலும் திருமணம் ஆகிவிட்டது. அதில் ஒரு மகள், திருச்சியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். அவரை பார்க்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் மற்றும் சந்தியா ஆகியோர் சென்றனர்.

இதற்கிடையில் நேற்று காலையில் அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் துடியலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கிடைத்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News