செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்திய காட்சி.

திட்டக்குடி தேமுதிக வேட்பாளரின் தாயார் மரணம்- பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி

Published On 2021-03-30 15:24 GMT   |   Update On 2021-03-30 15:24 GMT
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளரின் தாயார் மரணம் அடைந்தார். இதுபற்றி அறிந்த பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கடலூர்:

கடலூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளரும், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான உமாநாத்தின் தாயாரான உமாராணி நேற்று சிதம்பரத்தில் மரணம் அடைந்தார். 

இதுபற்றி அறிந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று உமாராணியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

தொடர்ந்து மாவட்ட செயலாளர் உமாநாத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News