ஆன்மிகம்
நவராத்திரி 2-வது நாள்: ஞானப்பிரசுனாம்பிகை தாயார் விஷ்ணு அலங்காரத்தில் காட்சி
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நவராத்திரி விழாவின் 2-வது நாளில் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மகாவிஷ்ணு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை 4 கால அபிஷேகத்துக்கு பின் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மகாவிஷ்ணு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் உற்சவர் தாயார் கோவில் உள்ளே வலம் வந்தார். மூலவர் தாயார் சன்னதிக்கு எதிரே உற்சவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொலு பொம்மை கண்காட்சி நடந்தது. திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் உற்சவர் தாயார் கோவில் உள்ளே வலம் வந்தார். மூலவர் தாயார் சன்னதிக்கு எதிரே உற்சவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொலு பொம்மை கண்காட்சி நடந்தது. திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.