ஆன்மிகம்
நாமக்கல் கோட்டை செல்லாண்டியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
நாமக்கல் கோட்டை செல்லாண்டியம்மன் கோவிலில் நாமக்கல் நகர் கோட்டை ரோடு உள்பட முக்கிய சாலைகளின் வழியாக பால்குடம் ஊர்வலம் நடந்தது.
நாமக்கல் கோட்டை செல்லாண்டியம்மன் கோவிலில் தைப்பூ சத்தையொட்டி காவடி பூஜை நடந்தது. முன்னதாக நாமக்கல் நகர் கோட்டை ரோடு உள்பட முக்கிய சாலைகளின் வழியாக பால்குடம் ஊர்வலம் நடந்தது.
நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவில் இருந்து செல்லாண்டியம்மன் கோவிலுக்கு பால்குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை காவடி பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் இன்று (சனிக்கிழமை) மாலை இடும்பன் பூஜை நடைபெற உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவில் இருந்து செல்லாண்டியம்மன் கோவிலுக்கு பால்குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை காவடி பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் இன்று (சனிக்கிழமை) மாலை இடும்பன் பூஜை நடைபெற உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.