ஆன்மிகம்
புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா 28-ந்தேதி நடக்கிறது
தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு 28-ந்தேதி இரவு 7 மணிக்கு ருத்ர ஏகாதசி, நள்ளிரவு 12.57 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஆண்டுதோறும் நடைபெறும். வருகிற 28-ந் தேதி இரவு 12.57 மணிக்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.
அதனை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, 27-ந் தேதி காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், பகல் 12 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், 28-ந் தேதி இரவு 7 மணிக்கு ருத்ர ஏகாதசி, நள்ளிரவு 12.57 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
ஏற்பாடுகளை சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, புளியரை கோவில் கண்காணிப்பாளர் ரத்தினவேலு ஆகியோர் செய்து வருகின்றனர்.
அதனை முன்னிட்டு வருகிற 26-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, 27-ந் தேதி காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், பகல் 12 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், 28-ந் தேதி இரவு 7 மணிக்கு ருத்ர ஏகாதசி, நள்ளிரவு 12.57 மணிக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
ஏற்பாடுகளை சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, புளியரை கோவில் கண்காணிப்பாளர் ரத்தினவேலு ஆகியோர் செய்து வருகின்றனர்.