செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 118 பேர் பாதிப்பு

Published On 2021-07-19 11:59 GMT   |   Update On 2021-07-19 11:59 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் 118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 488- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 879 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 385 பேர் ஆக உயர்ந்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 164-ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1201- ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News