செய்திகள்
சித்தா மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி, பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் மூன்றாமாண்டு எம்.டி. பட்ட மேற்படிப்பிற்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் வருகிற 7-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் மூன்றாமாண்டு எம்.டி. (சித்தா) பட்ட மேற்படிப்பிற்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் வருகிற 7-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.