செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-07-18 11:43 GMT   |   Update On 2021-07-18 11:43 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில்  புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 748 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 38 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 351 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News