செய்திகள்
டெல்லியில் சுகாதார மந்திரியின் தந்தை கொரோனாவுக்கு பலி
தலைநகர் டெல்லியில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது டெல்லி சுகாதார மந்திரி சத்தியேந்திர ஜெயினின் தந்தை, கொரோனாவுக்கு பலியான சோகம் நிகழ்ந்திருக்கிறது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது டெல்லி சுகாதார மந்திரி சத்தியேந்திர ஜெயினின் தந்தை, கொரோனாவுக்கு பலியான சோகம் நிகழ்ந்திருக்கிறது.
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இதுகுறித்து டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “சுகாதார மந்திரி சத்தியேந்திர ஜெயின், தனது தந்தையை கொரோனாவால் இழந்துள்ளார். இது மிகமிக சோகமானது. சுகாதார மந்திரி மக்களுக்காக கடிகாரம்போல சுற்றிச்சுழன்று பணி செய்து கொண்டிருக்கிறார். அவரது தந்தையின் ஆத்மாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என்று கூறி உள்ளார்.
சுகாதார மந்திரியும், கடந்த ஜூன் மாதம் கொரோனா தாக்கி பின்னர் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில், ஒரே நாளில், 25 ஆயிரத்து 219 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 412 பேர் மரணம் அடைந்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது டெல்லி சுகாதார மந்திரி சத்தியேந்திர ஜெயினின் தந்தை, கொரோனாவுக்கு பலியான சோகம் நிகழ்ந்திருக்கிறது.
முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இதுகுறித்து டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “சுகாதார மந்திரி சத்தியேந்திர ஜெயின், தனது தந்தையை கொரோனாவால் இழந்துள்ளார். இது மிகமிக சோகமானது. சுகாதார மந்திரி மக்களுக்காக கடிகாரம்போல சுற்றிச்சுழன்று பணி செய்து கொண்டிருக்கிறார். அவரது தந்தையின் ஆத்மாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.” என்று கூறி உள்ளார்.
சுகாதார மந்திரியும், கடந்த ஜூன் மாதம் கொரோனா தாக்கி பின்னர் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில், ஒரே நாளில், 25 ஆயிரத்து 219 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 412 பேர் மரணம் அடைந்துள்ளார்.