செய்திகள்
தற்கொலை

வள்ளியூர் அருகே கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-06-22 10:32 GMT   |   Update On 2021-06-22 10:32 GMT
வள்ளியூர் அருகே கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த பொத்தையடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி பத்மா (வயது 23).

இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது பத்மா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதனால் அவர் பிரசவ செலவுக்கு பணம் சேர்த்து வைக்க வேண்டும் என்று கணவரிடம் கூறி உள்ளார். ஆனால் செல்வராஜ் தினசரி வீட்டிற்கு குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார். பத்மா பலமுறை எடுத்து கூறியும் ஜெயராஜ் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பத்மா கடந்த 19-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றினர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பத்மாவை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News