வழிபாடு
திருப்பதியில் தெப்போற்சவம் 4-வதுநாள்: ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள் திருச்சி வாகனத்தில் உலா
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 4-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள் தாயார் திருச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள் தாயார் திருச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உள்ளே உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முன்னதாக நேற்று காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள் தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
முன்னதாக நேற்று காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஸ்ரீகிருஷ்ணர், ஆண்டாள் தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.