செய்திகள்
தேவகோட்டையில் ஊரடங்கை மீறிய கடைகளுக்கு சீல் வைப்பு
ஊரடங்கு விதிமுறையை மீறியும், சமூக இடைவெளி இன்றியும் 3 ஜவுளி கடைகள், 2 நகை கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு உள்ளன.
தேவகோட்டை:
தேவகோட்டை நகரில் கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறியும், சமூக இடைவெளி இன்றியும் 3 ஜவுளி கடைகள், 2 நகை கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு உள்ளன.இதனை ஆய்வின்போது கண்டுபிடித்த தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சென்று பூட்டி சீல் வைத்தனர்.