செய்திகள்
துரைமுருகன்

சட்டப்பேரவை அவை முன்னவராக துரைமுருகன் நியமனம்

Published On 2021-05-08 14:22 GMT   |   Update On 2021-05-08 14:22 GMT
சட்டப்பேரவை அவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் மே 11ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் சட்டப்பேரவையின் அவை முன்னவராக துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று அறிப்பு வெளியிட்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் அவை முன்னவர் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது. ஒவ்வொரு தீர்மானமும் கொண்டுவரப்படும் போது அவை முன்னவர்தான் அதனை முன்மொழிவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News