செய்திகள்
கோப்புபடம்

வருசநாடு அருகே தென்னந்தோப்பில் தொழிலாளி பிணம் - போலீசார் விசாரணை

Published On 2021-02-22 13:05 GMT   |   Update On 2021-02-22 13:05 GMT
வருசநாடு அருகே தென்னந்தோப்பில் தொழிலாளி பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடமலைக்குண்டு:

வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு நாகம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று கோட்டைச்சாமி தனது மனைவியிடம் டீ குடிக்க கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் சிங்கராஜபுரம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கோட்டைச்சாமி இறந்து கிடப்பதாக அவரது மனைவி நாகம்மாளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாகம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது கோட்டைச்சாமி கைகள் உடைந்து மூளை சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருசநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோட்டைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கோட்டைச்சாமி தென்னை மரத்தில் ஏறும்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர்தான் உண்மை தெரியும் என்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News