செய்திகள்
வேலூரில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு
வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்...நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்