செய்திகள்
கொள்ளை

கடத்தூரில் 5 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- மூதாட்டியிடம் செயின் பறிப்பு

Published On 2019-10-22 16:07 GMT   |   Update On 2019-10-22 16:07 GMT
கடத்தூரில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வன்னியர் தெரு பகுதியில் நள்ளிரவு 5 வீடுகளில் பூட்டுகளை உடைத்தனர். பின்னர் அவர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர்.

அப்போது ஒரு வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் வாயில் துணியை திணித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து தொடர்ந்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News