செய்திகள்
கொடைக்கானலில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
கொடைக்கானலை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே நேற்று 17 பெண்கள் உள்பட மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதேநேரம் 13 பெண்கள் உள்பட 54 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.