செய்திகள்
கோப்பு படம்.

தமிழகத்தில் மேலும் 5,679 பேருக்கு கொரோனா தொற்று- 72 பேர் உயிரிழப்பு

Published On 2020-09-25 14:03 GMT   |   Update On 2020-09-25 14:03 GMT
தமிழகத்தில் இன்று மேலும் 5,679- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இன்று மேலும் 5,679-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,418-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 370- ஆக உள்ளது.

தொற்று பாதிப்புடன் 46 ஆயிரத்து 386- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.25 சதவிகிதமாக உள்ளது.

சென்னையில் மேலும் 1193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 1.60 லட்சமாக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News