உள்ளூர் செய்திகள்
கைது

சட்டவிரோதமாக அனுமதியின்றி தருமபுரியில் தங்கியிருந்த பங்களாதேஷ்சை சேர்ந்த 7 பேர் கைது

Published On 2022-01-19 08:02 GMT   |   Update On 2022-01-19 08:02 GMT
தருமபுரி பகுதியில் சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் பங்காளதேஷ்சை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.
தருமபுரி:

தருமபுரி பகுதியில் சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் பங்காளதேஷ்சை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் சென்று கண்காணித்தனர்.

தருமபுரி அடுத்த சோகத்தூர் கூட்ரோட்டில் உள்ள ஒரு பழைய இரும்பு குடோனில் பங்காளதேஷ்சை சேர்ந்த 7 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது.

அங்கு பங்காளதேஷ்சை சேர்ந்த ரோபித் (வயது 50), அவரது மகன் மாமூன் (19) மற்றும் ஒரு பெண், 2 வயது குழந்தை உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் தருமபுரியில் தங்கியது ஏன்? என்பது பற்றி தருமபுரி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News