குழந்தை பராமரிப்பு
தேசிய பெண் குழந்தைகள் தினம்

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்

Published On 2022-01-24 06:24 GMT   |   Update On 2022-01-24 06:24 GMT
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
பெண் குழந்தைகள்தான் குடும்பத்தின் அச்சாணியாக விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தின் மொத்த உணர்ச்சிக் கலவையும் பெண் குழந்தையை அடிப்படையாகக் கொண்டே வெளிப்படுகிறது. பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் வகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பாராட்டத்தக்கது. எனினும், இன்றும் பெண் குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை  சில இடங்களில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்நாள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுப்பது, பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்வது ஆகியவை இந்நாளின் நோக்கமாகும்.

தற்போதையச் சூழலில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது சந்தேகமே. அனைவரும் முதலில் குடும்பத்தில் தங்கள் பெண் குழந்தைகளை மதிப்பான முறையில் நடத்த ஆரம்பிக்க வேண்டும். இதுவே, சமூகத்திலும் மாற்றத்தை உண்டாக்கும்.
Tags:    

Similar News