உள்ளூர் செய்திகள்
செஞ்சிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
செஞ்சிக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி:
சென்னை மறைமலைநகர் பொத்தேரியை சேர்ந்தவர் எட்வின். இவரது மகன் வின்சென்ட்(வயது 18). இவர், தனது நண்பரான சுரேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை 8 மணிக்கு செஞ்சிக்கோட்டைக்கு வந்தார். அங்கு கோட்டையில் ஏறிச்சென்று சுற்றிப்பார்த்தனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ஆகும். இது குறித்து வின்சென்ட் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி, சப்-இன்ஸ்பெக்டர் நடராசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த சாமுவேல் மகன் மணிகண்டன்(வயது 21) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.