செய்திகள்
தூசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் டிப்பர் லாரி மோதி பலி
மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள படக் கல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 34), லாரி டிரைவர் இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் சந்திரசேகர் நேற்று காலை 7 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் மாமண்டூர் கிராமத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
சுருட்டல் சாலையில் சென்றபோது எதிேர கல்குவாரியில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிவந்த டிப்பர் லாரி இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
இதனிடையே மாமண்டூர் சுருட்டல் சாலையில் கல்குவாரியில் இருந்து வரும் டிப்பர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது.
எனவே லாரிகள் செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சந்திரசேகரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதுப்பாளையம் கூட்டுரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள படக் கல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 34), லாரி டிரைவர் இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் சந்திரசேகர் நேற்று காலை 7 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் மாமண்டூர் கிராமத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
சுருட்டல் சாலையில் சென்றபோது எதிேர கல்குவாரியில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிவந்த டிப்பர் லாரி இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
இதனிடையே மாமண்டூர் சுருட்டல் சாலையில் கல்குவாரியில் இருந்து வரும் டிப்பர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது.
எனவே லாரிகள் செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சந்திரசேகரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புதுப்பாளையம் கூட்டுரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.