செய்திகள்
மழை

குமரியில் சாரல் மழை- பேச்சிப்பாறை அணை நிலவரம்

Published On 2020-12-04 12:12 GMT   |   Update On 2020-12-04 12:12 GMT
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 44.15 அடியாக உள்ளது.
குமரி:

குமரி மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக கனமழை பெய்யுமென்று கூறப்பட்டது. ஆனால் நேற்று முதல் ஒரு சில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது.

நாகர்கோவில், வடசேரி, கோட்டார், செட்டிக்குளம், கோணம் பகுதிகளில் மட்டும் மழை கொட்டியது. மேற்கு மாவட்டத்தில் லேசான மழையே பெய்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் அவை மூடப்பட்டன.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.15 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.90 அடியாக உள்ளது. அணைக்கு 132 கனஅடி தண்ணீரே வருகிறது.

பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News