செய்திகள்
ராஜ்நாத் சிங்

குடியரசுத் தலைவர் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்

Published On 2020-11-19 12:00 GMT   |   Update On 2020-11-19 12:00 GMT
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எழுதிய இரண்டு புத்தகங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் குடியரசு நெறிமுறை மற்றும் லோக்தந்த்ரா கே ஸ்வார் (The Republican Ethic &  Loktantra Ke Swar) ஆகிய இரண்டு புத்தங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டார். புத்தகங்களை வெளியிட்ட ராஜ்நாத் சிங் ‘‘இந்த புத்தகங்கள் இந்தியாவின் தற்போதைய சகாப்தத்தைப் பற்றிய நுண்ணறிவுள்ளவை’’  எனத் தெரிவித்துள்ளார்.

ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக பணியாற்றி வரும் இந்த மூன்று ஆண்டுகளில் பேசிய உரைகளும் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.
Tags:    

Similar News