ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 3 வாயில்கள் மூடல்

Published On 2021-04-26 08:28 GMT   |   Update On 2021-04-26 08:28 GMT
கொரோனா பரவல் காரணமாக சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி ஆகிய 3 நுழைவு வாயில்களும் அடைக்கப்பட்டது. கீழ சன்னதி வாயில் மட்டும் மூடப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. இதை கட்டுப்படுத்தும்பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கு வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு சார்பில் மேலும் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி ஆகிய 3 நுழைவு வாயில்களும் நேற்று இரவு முதல் அடைக்கப்பட்டது. கீழ சன்னதி வாயில் மட்டும் மூடப்படாமல் உள்ளது.

பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப் பட்டுள்ள நிலையில் தீட்சிதர்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று வழக்கமான பூஜைகளை செய்ய அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News