செய்திகள்
கோப்புபடம்

நெல்லையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2021-08-24 11:03 GMT   |   Update On 2021-08-24 11:03 GMT
நெல்லையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது27). இவர் மேலப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மேலப்பாளையம் பஜாரில் நின்ற சிவாவை பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 1¼ கிலோ கஞ்சா இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து சிவாவை கைது செய்தனர்.

இது போல நெல்லை டவுன் வையாபுரி நகரை சேர்ந்த சதீஷ் (22), மகேஷ் ராஜா (20) ஆகியோர் டவுன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டவுன் போலீசார் இவர்களை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News