செய்திகள்
கோப்பு படம்

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை

Published On 2019-10-04 22:14 GMT   |   Update On 2019-10-04 22:14 GMT
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு:    

இலங்கை யாழ்ப்பாணம் நகரில் உள்ள பலாலி ராணுவ விமானநிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் நிதி உதவி வழங்கி இருந்தது. இந்தநிலையில் இந்த விரிவாக்க பணி முடிவடைந்ததை அடுத்து, வருகிற 17-ந்தேதி பலாலி சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே அங்கிருந்து முதற்கட்டமாக இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கும் 15-ந்தேதியே விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News