செய்திகள்
தற்கொலை

பொள்ளாச்சி அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2019-11-18 11:44 GMT   |   Update On 2019-11-18 11:44 GMT
பொள்ளாச்சி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

பொள்ளாச்சி அருகே உள்ள புறவிபாளையத்தை சேர்ந்தவர் தர்மன். இவரது மகள் ஆனந்த ஜோதி (வயது 35). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஆனந்த ஜோதியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News