செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2021-06-01 15:41 GMT   |   Update On 2021-06-01 15:41 GMT
பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர் அருகே உள்ள ஒரு காட்டு பகுதியில் பணம் வைத்து சூதாடிய பாலசுப்பிரமணி (வயது 27), சாமிநாதன் (42), சக்திவேல் (42), ரமேஷ் (36) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News