செய்திகள்
பணம் மோசடி

மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி

Published On 2020-10-31 02:41 GMT   |   Update On 2020-10-31 02:41 GMT
மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 45). இவருடைய மகளுக்கு மருத்துவ சீட் வாங்குவதற்காக விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாமகேஷ்வரன் (50) என்பவரிடம் ரூ.45 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை வாங்கிய உமாமகேஷ்வரன், மருத்துவ சீட் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ரேவதி, மருத்துவ சீட்டுக்கு கொடுத்த ரூ.45 லட்சத்தை திருப்பி தரும்படி உமாமகேஷ்வரனிடம் கேட்டார். ஆனாலும் பணத்தை கொடுக்காமல் இருந்து வந்தார்.

இதுகுறித்து ரேவதி அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாமகேஷ்வரனை தீவிரமாக தேடி வந்தனர்.

நேற்று விருகம்பாக்கம் பகுதியில் உமாமகேஸ்வரன் இருப்பதாக வந்த தகவலையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராவின்டேனி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உமாமகேஸ்வரனை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர், ரேவதியிடம் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.45 லட்சம் வாங்கி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். உமாமகேஷ்வரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News