ஆன்மிகம்
அனுமன்

மகத்துவம் தரும் மாருதி விரத வழிபாடு

Published On 2020-01-01 06:39 GMT   |   Update On 2020-01-01 06:39 GMT
விரதம் இருந்து தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் ஆஞ்சநேயர்.
ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் வலிமை இருக்கிறது. விரதம் இருந்து தெய்வங்களைத் தரிசித்தால் தித்திக்கும் வாழ்க்கை அமையும். நாம் வழிபடுகின்ற விதத்தில் அவர்கள் நமக்கு வரத்தை வழங்குகிறார்கள். அந்த அடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும் உறுதுணையாக இருந்து ஒப்பற்ற வாழ்வு தரும் தெய்வம் ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயருக்கு வடை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும். அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். வெற்றிலை மாலை சூட்டினால் கவலைகள் அகன்று, வெற்றிகள் வீடு தேடி வரும். ஆனந்த வாழ்வு தரும் அனுமனை அவரது ஜனன நாளில் வழிபட்டால் பேரும், புகழும், பெருமையும் வந்து சேரும்.
Tags:    

Similar News