ஆன்மிகம்
சபரிமலை கோவிலில் நிறை புத்தரிசி பூஜை

சபரிமலை கோவிலில் நிறை புத்தரிசி பூஜை

Published On 2021-08-17 04:11 GMT   |   Update On 2021-08-17 04:11 GMT
ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் நேற்று நிறை புத்தரிசி பூஜை நடந்தது. கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்ட நெற்கதிர்கள், சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த நெற்கதிர்களை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி ஆகியோர் வழங்கினர். இந்த பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வழக்கமான பூஜைகளுடன் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. 21-ந் தேதி திருவோண விழா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும்.

அன்றைய தினம் பக்தர்களுக்கு ஓண விருந்து (சத்யா) திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

Tags:    

Similar News