ஆன்மிகம்
சேரன்மாதேவி பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா ரத்து
தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் சேரன்மாதேவி பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா ரத்து செய்யப்படுவதாக, விழாக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
சேரன்மாதேவி தாமிரபரணி நதிக்கரை ஓரம் அமைந்துள்ளது பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில். இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா வருகிற 3, 4-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் கொடை விழா ரத்து செய்யப்படுவதாக, விழாக் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.