செய்திகள்
கைது

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 55 லட்சம் சொத்தை அபகரித்த 3 பேர் கைது

Published On 2021-11-27 07:43 GMT   |   Update On 2021-11-27 07:43 GMT
சைதாப்பேட்டை அருகே போலி ஆவணங்கள் மூலம் ரூ.55 லட்சம் சொத்தை அபகரித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவருக்கு சொந்தமாக சைதாப்பேட்டை தாலூகா சீவரத்தில் 1,393 ச.அடி இடம் உள்ளது. இதில் 1,077 ச. அடி இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளதாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் சண்முகம் புகார் அளித்தார்.

இது தொடர்பாக நில மோசடி பிரிவு போலீஸ் உதவி கமி‌ஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர் மேரி ராணி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது சண்முகத்துக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.55 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக சித்ரா, கணேசன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags:    

Similar News