தொழில்நுட்பம்
விவோ எக்ஸ்50 சீரிஸ்

விவோ புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது

Published On 2020-06-03 06:22 GMT   |   Update On 2020-06-03 06:22 GMT
விவோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்50 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது.



விவோ நிறுவனத்தின் எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இவற்றின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை விவோ இந்தியா தலைமை செயல் அதிகாரி ஜெரோம் சென் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். எனினும், ஸ்மார்ட்போன்களின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.



விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் ஒப்போ ரெனோ 4, ஒன்பிளஸ் இசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News