செய்திகள்
விபத்து பலி

கெலமங்கலம் அருகே வேன் மோதி வாலிபர் பலி

Published On 2021-01-10 03:17 GMT   |   Update On 2021-01-10 03:17 GMT
கெலமங்கலம் அருகே வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் வாணியர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 26). சூளகிரி அருகே உள்ள டி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் மூர்த்தி (24). நண்பர்களான இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியில் இருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மூர்த்தி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News